
சென்னை: தமிழ்நாடு போராடும் என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது' என்று 'இளவரசர்' உதயநிதி ஸ்டாலின் இறுமாப்புடன் பேசி இருக்கிறார். ஹிட்லர், முசோலினி போல பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.