
சென்னை: ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்ததை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதி முதல் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 71 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின்கீழ் பணியில் சேராமல், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கும்படி கோரிக்கைவிடுத்து வந்தனர்.