
சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலர் பதவியில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து மொத்த காலி இடங்கள் 1,483 ஆகும். இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.