
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சர்தார் வல்லபபாய் பட்டேல் வேளாண் பல்கலைக்கழக. வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு சந்தை நடைபெறுகிறது.
இதில் வட மாநிலங்களின் விவசாயிகள் பலர் பங்கேற்கின்றனர். ஹரியானாவின் விவசாயியான நரேந்திரசிங்கும் தனது எருமையை இங்கு காட்சிக்கு வைத்துள்ளார். மீரட் சந்தையில் இந்த ஹரியானா மாநில எருமைக்கு ரூ.8 கோடி விலை வைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் உரிமையாளர் நரேந்திரசிங் தன் எருமையை விற்பனை செய்ய விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அந்த எருமைக்கு ‘எம்எல்ஏ’ என அதன் உரிமையாளர் பெயர்சூட்டியுள்ளார்.