
6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தலிபான் அரசு சார்பில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதி இந்தியா வருவது இதுவே முதல் முறை.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமிர் கான் முட்டாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.