
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. மேலும், சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனை நிர்வாகி ராமலிங்கம், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் பரமசிவம் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.