
மதுரை: மதுரையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை யாகப்பாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் காவலர்கள் விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வண்டியூர் அருகே கால்வாயில் தினேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையின் போது போலீஸார் தாக்கியதில் தினேஷ்குமார் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் நேற்று முன்தினம் அண்ணாநகர் காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.