
திருவள்ளூர்: கனமழையால் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், பள்ளிப்பட்டை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதிகளில் உள்ள மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.