
தருமபுரி: நடிகர் விஜய்யை மிரட்டி அதிமுக கூட்டணியில் இணைத்து திமுக-வை வீழ்த்த பிரதமர் மோடியும், அமித்ஷாவும் முயற்சி மேற்கொள்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தருமபுரியில் தெரிவித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தருமபுரியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 14 வயது சிறுவன் இந்த செயலை செய்ததாக மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.