
புதுடெல்லி: பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இளைஞர்களுக்கான தொழில்முனைவு மற்றும் அதற்கான வழிகாட்டுதல் முயற்சிகளை விரிவாக்கம் செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்துள்ளது.