
கோனசீமா: ஆந்திராவின் கோனசீமா மாவட்டம், ராயவரம் கணபதி மைதானத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை பார்சல் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இங்கு புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 4 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மோசமாக இருந்தது.