
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சுகாதார வளாகத்தில் விடுபட்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. மேலும், இது தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆடுதுறையில் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் கீழ், ரூ.34 லட்சம் மதிப்பில் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை கடந்த 6-ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பேரூராட்சி தலைவர் திறந்து வைத்தார்.