
திருநெல்வேலி: திமுக அரசால் விஜய்க்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பொதுமக்களிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவரப் போகிறார்கள். ஒரு குடையின் கீழ் பல கொடிகள் வர வேண்டும் என்பது எனது ஆசை.