
மும்பை: மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு லுக் அவுட் சர்க்குலர் (எல்ஓசி) நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டும் லுக் அவுட் சர்க்குலர் நோட்டீஸை ரத்து செய்யவும் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.