
சென்னை: பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் துல்கர் சல்மான், அவரது தந்தை மம்முட்டியின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம், கேரளாவில் மொத்தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயர்களில் ஒருவர் துல்கர் சல்மான். பிரபல நடிகர் மம்முட்டியின் மகனான இவர், தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில், துல்கர் சல்மான் போலி ஆவணங்கள் மூலமாக சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கியதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.