
அயோத்தி: வட தென்னிந்திய கலாச்சார ஒற்றுமைக்கு புதிய அடையாளமாக அயோத்தியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த மூன்று துறவி – இசை மேதைகளின் சிலைகள் திறந்துவைக்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த புரந்தரதாசர் ஆகியோர் இசைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கவும், வட மற்றும் தென்னிந்திய கலாச்சார சங்கமத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அயோத்தியில் அவர்களுக்கு சிலையை நிறுவ உத்தர பிரதேச அரசு முடிவெடுத்தது.