• October 9, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார். இந்த விமான நிலை​யம் அதானி குழு​மத்​தால் பொது தனி​யார் கூட்​டாண்மை (பிபிபி) மாதிரி​யின்கீழ் கட்​டப் பட்​டுள்​ளது. இங்கு வரும் டிசம்​பர் மாதம் முதல் உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச பயணி​களுக்​கான சேவை தொடங்​க உள்​ளது.

விமான நிலை​யத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசி​ய​தாவது: மும்​பை​யில் பயணம் மற்​றும் இணைப்பை மாற்​றி அமைப்​ப​தில் நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் முக்​கிய பங்​காற்​றும். மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள விவ​சா​யிகளை மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய சந்​தைகளு​டன் இணைப்​ப​தன் மூலம் இந்த விமான நிலை​யம் பொருளா​தார வாய்ப்​பு​களை மேம்​படுத்​தும். இது, ஆசி​யா​வின் மிகப்​பெரிய இணைப்பு மைய​மாக உரு​வெடுக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *