• October 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாட்​டில் முதல் முறை​யாக அசாம் மாநிலத்​தில் பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் சுரங்​கப்​பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. ரூ.6,000 கோடி மதிப்​பிலான இத்​திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை விரை​வில் ஒப்​புதல் அளிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அசாம் மாநிலத்​தில் நுமலிகர் என்ற இடத்​திலிருந்து கோஹ்பூர் வரை, பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் சுரங்​கப்​பாதை அமைப்​ப​தற்​கான திட்​டம் ரூ.6,000 கோடி மதிப்​பீட்​டில் தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. இது ஆற்​றுக்கு கீழே அமைக்​கப்​படும் நாட்டின் முதல் சுரங்​கப்​பாதை திட்​ட​மாகும். சீன எல்லை அருகே அருணாச்​சலப் பிரதேசத்தை ஒட்டி அமைக்​கப்​படும் இந்த சுரங்​கப்​பாதை 33.7 கி.மீ நீளத்​துக்​கும், பிரம்​மபுத்​திர நதி​யின் கீழ் 32 மீட்​டர் ஆழத்​தி​லும் அமைக்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டம் நிறைவு பெற 5 ஆண்டு ஆகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *