
‘பிரஸ் மீட் நாயகன்’ என்று பத்திரிகையாளர்களே பட்டம் கொடுக்குமளவுக்கு, எந்தக் கேள்வி கேட்டாலும் தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொல்வதுடன், “வேற கேள்வி ஏதும் இருக்கா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்புபவர் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், எதிர்காலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவரளித்த பேட்டி:
கரூர் சம்பவத்தில் அரசு மீது தவறில்லை. எந்த சதியும் நடக்கவில்லை என்கிறீர்கள். அப்படியானால் ஒரு நபர் ஆணையம், சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை எல்லாம் எதற்கு?