
திருநெல்வேலி: “கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது, யாரையும் பழிதீர்க்கும் அவசியமும் கிடையாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டுத் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் தமிழகத்தில் இருப்பது பெருமை சேர்க்கிறது. தாமிரபரணி ஆறு சிறப்பாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவதுடன் விவசாயிகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது.