
தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தார் இயக்கும் படம் தாமா. இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா – நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.
அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் நடந்துவருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ‘நுவ்வு நா சொந்தமா’ பாடல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதற்கிடையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரஷ்மிகா பேட்டியளித்திருக்கிறார். அதில், “ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படம் வெளியான 2, 3 நாள்களில் படத்தைப் பார்க்கவில்லை.
அதன்பிறகுதான் படம் பார்க்கும் சூழல் அமைந்தது. படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவுக்கு படம் குறித்து செய்தி அனுப்பினேன். அவர்களும் நன்றி தெரிவித்தார்கள்.
கன்னடத் திரைத்துறையிலிருந்து என்னை விலக்கிவிட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. பொதுக் கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் எல்லாவற்றையும் ஆன்லைனில் பகிர முடியாது, பகிரவும் கூடாது.
உள்ளுக்குள் என்ன நடக்குதுன்னு உலகத்துக்குத் தெரியாது. நம்மால எப்பவும் நம்ம தனிப்பட்ட வாழ்க்கையில கேமராவை வைக்க முடியாது. வரும் வந்ததிகளில் தெரிஞ்சதை விட நிறைய விஷயங்கள் இருக்கு.
தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனா தனிப்பட்ட அனுமானங்கள் தப்பு. ஒருத்தர் வாழ்க்கை பத்தி மக்கள் என்ன சொல்றாங்கன்றது முக்கியமில்ல.
அதே நேரம் தொழில்முறை வாழ்க்கையில் நாம மாத்திக்க வேண்டியதை சொன்னா அதைக் கருத்தில் கொண்டு வேலை செய்வோம். இதுவரைக்கும் எனக்கு எந்த தடையும் விதிக்கப்படல.” என்றார்.