
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்தர் எம்.பி. கஜேன் முர்மு, சிலிகுரி எம்எல்ஏ. சங்கர் கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிடச் சென்றனர்.