
சென்னை: தமிழகத்தில் 3,170 யானைகள் உள்ளதாக வனத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யானைகள் பாதுகாப்பில் தமிழகம் நீண்டகாலமாகவே முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பிராந்திய வனப் பிரிவுகள் மற்றும் ஒரு தேசியப் பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2,043 வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மொத்தமுள்ள யானைகளில் 44 சதவீதம் வளர்ச்சியடைந்தவை என்பது தெரியவந்துள்ளது.