
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு நாளும் மருத்துவம், உயர்கல்வி அவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.