
காஞ்சிபுரம்: வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆலை பூட்டப்பட்டிருந்ததால் ஆலைக் கதவில் ஒட்டப்பட்டது.
இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதோடு, 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.