
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் கட்சித் தலைவர் விஜய் வீடியோகால் மூலம் பேசியுள்ளார். மேலும், விரைவில் கரூர் வருவதாக அவர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் மட்டும் கரூர் செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.