• October 8, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் பெட்​ரோல் மற்​றும் டீசலுக்கு வெவ்​வேறு விகிதங்​களில் வரி விதிப்​ப​தால் ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் அவற்​றின் விலை​யில் மாற்​றம் உள்​ளது. பெட்​ரோல் மற்​றும் டீசல் விற்​பனை விலை என்​பது கச்சா எண்​ணெய் விலை, மத்​திய அரசின் கலால் வரி, விற்​பனை​யாளர் கமிஷன் மற்​றும் மாநில அரசின் வரி உள்​ளடங்​கிய​தாகும்.

தமிழகத்​தில் பெட்​ரோல் விற்​பனை விலை​யில் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி லிட்​டருக்கு 13 சதவீத​மாக​வும், டீசலுக்​கு 11 சதவீத​மாக​வும் உள்​ளது. பெட்​ரோல், டீசல் மீது மத்​திய அரசு எண்​ணெய் தொழில் மேம்​பாட்டு வாரிய வரி, தற்​செயல் தேசிய பேரிடர் வரி, கலால் வரி, கூடு​தல் கலால் வரி மற்​றும் சிறப்பு கூடு​தல் கலால் வரி போன்ற வரி​களை விதிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *