• October 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜ​ராத் முதல்​வர் பதவி​யில் நீடித்​தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்​டின் பிரதம​ராக பதவி​யேற்​றார். தொடர்ந்து 3-வது முறை​யாக அவர் பிரதம​ராக பதவி​யேற்று நாட்டு மக்​களுக்கு சேவை​யாற்றி வருகிறார்.

அரசின் தலை​மைப் பொறுப்​பில் 25-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக பதவி​யேற்​றேன். பூகம்​பம், புயல், வறட்​சி, அரசி​யல் குழப்​பம் நிறைந்த காலத்​தில் முதல்​வ​ராக பணி​யாற்​றினேன். பல்​வேறு சவால்​களை கடந்து குஜ​ராத்தை கட்​டி​யெழுப்​பினேன். நாட்டு மக்​களுக்கு திறம்பட சேவை​யாற்​றினேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *