
புதுடெல்லி: நவி மும்பை சர்வதேச விமான நிலையம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ.19,650 கோடி செலவில், 1,160 ஹெக்டேர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்தின் முதல்கட்ட திட்டப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் 4-ம் கட்ட திட்டப் பணிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. இவை நிறைவடையும்போது ஆண்டுக்கு 9 கோடி பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும். வரும் 2030-ம் ஆண்டில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.