• October 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​கிறார்.

மகா​ராஷ்டி​ரா​வின் நவி மும்​பை​யில் ரூ.19,650 கோடி செல​வில், 1,160 ஹெக்​டேர் பரப்​பள​வில் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த விமான நிலை​யத்​தின் முதல்​கட்ட திட்​டப் பணி​கள் நிறைவு பெற்​றிருக்​கிறது. இதன்​மூலம் ஆண்​டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்​கொள்ள முடி​யும். மேலும் 4-ம் கட்ட திட்​டப் பணி​கள் அடுத்​தடுத்து நிறைவேற்​றப்பட உள்​ளன. இவை நிறைவடை​யும்​போது ஆண்​டுக்கு 9 கோடி பேர் வரை பயணம் மேற்​கொள்ள முடி​யும். வரும் 2030-ம் ஆண்​டில் நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *