
சென்னை: சென்னையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
சென்னையில், டிட்கோ, பிசிஐ ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.