
கடலூர்: ஊராட்சி மன்ற தேர்தலின் போது நடைபெற்ற கொலை தொடர்பான வழக்கில், கடலூர் நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில். கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராமச்சந்திரன், ரவி ஆகியோர் போட்டியிட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தேர்தலில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவி ஆதரவாளர் குமார் என்பவருக்கும் முன்விரோதம் உருவானது.