• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​: தமிழக தொல்​லியல் துறை​யின் முன்​னாள் இயக்​குநர் நடன.​காசி​நாதன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனை அடைந்​தேன். காசி​நாதன் பல்​வேறு கல்​வெட்​டுகள், செப்​புப் பட்​ட​யங்​கள், பழமை​யான சிற்​பங்​கள், நடு​கற்​களை கண்​டு​பிடித்த பெரு​மைக்​குரிய​வர். தமிழரின் தொன்​மையை நிலை ​நாட்ட பூம்​பு​கார் ஆழ்​கடலாய்வு உள்​ளிட்ட பல ஆய்​வு​களைச் செய்​தவர்.

காசி​நாதன் தமிழகம் முழு​வதும் வரலாற்​றுக் கருத்​தரங்​கு​களை​யும், கல்​வெட்​டுப் பயிற்சி வகுப்​பு​களை​யும் நடத்தி பல இளைஞர்​களும் இத்​துறை​யில் ஆர்​வம் பெற உழைத்​துள்​ளார். இதுத​விர, கல்​லெழுத்​துக் கலை, சோழர் செப்​பேடு​கள், தமிழர் காசு இயல், ராச​ராசேச்​சுரம் உட்பட பல்​வேறு நூல்​களை எழு​தி​யதுடன், பல நூல்​களை பதிப்​பித்​து, தொல்​லியல் துறைக்கு பெரும் பங்​களிப்பை ஆற்றி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *