• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசின் தேசிய குற்​றப்​ப​திவு ஆவண காப்​பகம், இந்​தியா முழு​வதும் விவ​சா​யிகள் மற்​றும் விவ​சாய தொழிலா​ளர்​களின் தற்​கொலை தொடர்பான புள்ளி விவரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி 2022-ல் நாடு முழு​வதும் 1.71 லட்​சம் பேர் தற்​கொலை செய்​துள்​ளனர். அதில் 4,690 பேர் விவ​சா​யிகள். 6,096 பேர் விவ​சா​யத் தொழிலா​ளர்​கள். தொடர்ந்து 2023-ம் ஆண்​டில் தற்​கொலைகளின் எண்​ணிக்கை கொஞ்​சம் குறைந்​துள்​ளது.

உலகின் வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தியா வளர்ந்து வரு​வ​தாக​வும், வேளாண் உற்​பத்தி உயர்ந்​து, வேளாண் மகசூல் மும்​மடங்கு உயர்ந்​திருப்​ப​தகா​வும், இதனால் விவ​சா​யிகள் வரு​மானம் இரு​மடங்கு அதி​கரித்​திருப்​ப​தாக​வும் பிரதமர் அறி​வித்​தும் விவசா​யிகளின் தற்​கொலைகள் ஏன் தொடர்​கிறது. பல பரு​வங்​களில் மகசூலில் பாதிப்​பு​களே அதி​கம். அதே​போல் பேரிடர் கால பாதிப்​பு​களுக்கு நிவாரணம் கிடையாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *