
நிர்வாக வசதிக்காக கட்சி மாவட்டங்களை அதிகரித்துக் கொண்டே வரும் திமுக தலைமை, பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை அடுத்த தேர்தலில் அவரது உட்கட்சி எதிரிகள் காலைவாரி விட்டுவிடக் கூடாது என்பதாலேயே திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக-வை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.
அவரது கட்டுப்பாட்டில் அப்பாவுவின் ராதாபுரம், அம்பாச முத்திரம், நாங்குநேரி தொகுதிகள் வந்தன. ஆனால், மாவட்டத்தில் அப்பாவு பங்கேற்கும் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளை ஆவுடையப்பன் தவிர்ப்பதாக புகார்கள் கிளம்பின. மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே அப்பாவு, ஆவுடையப்பனை ஒன்றாகப் பார்க்க முடிந்தது.