
சென்னை: தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தவில்லை என்றும், அவர் மீது எந்த வன்மமும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியவது: “கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து அரசியல் ஆதாயம் தேட பாஜக, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை ஏற்க முடியாது.