
சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில், 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இது சம்பந்தமாக ஐபிஎஸ் அதிகாரி டேவிட் சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் 2023-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.