
இன்றோடு பிரதமர் மோடி மத்திய, மாநில அரசில் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.
மோடி பதிவு
அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது…
“இன்றுதான் 2001-ம் ஆண்டு, குஜராத்தின் முதலமைச்சராக முதன்முறையாகப் பொறுப்பேற்றேன். சக இந்தியர்களின் தொடர் வாழ்த்துகளுக்கு நன்றி. இன்றோடு அரசின் தலைமைப் பதவி வகிப்பதில் 25-வது ஆண்டுக்குள் நுழைகிறேன்.
இந்திய மக்களுக்கு என்னுடைய நன்றிகள்.
இத்தனை ஆண்டுகளாக, நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நம்மை வளர்த்த இந்தச் சிறந்த தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
2001 டு 2025
2001-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2014-ம் ஆண்டு வரை அதே பதவியில் தொடர்ந்தார்.
பின்னர், 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களைக் கடந்து, இப்போதும் பிரதமராகத் தொடர்ந்து வருகிறார்.
மோடியின் 25 ஆண்டுக்கால இந்தப் பயணத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
On this day in 2001, I took oath as Gujarat’s Chief Minister for the first time. Thanks to the continuous blessings of my fellow Indians, I am entering my 25th year of serving as the head of a Government. My gratitude to the people of India. Through all these years, it has been… pic.twitter.com/21qoOAEC3E
— Narendra Modi (@narendramodi) October 7, 2025