
சென்னை: “கரூர் சம்பவம் தொடர்பாக யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.” என நடிகை அம்பிகா கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார்.