• October 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கம்ப்​யூட்​டரில் நாம் மேற்​கொள்​ளும் அலு​வலக பணி​களுக்​கெல்​லாம் நாம் வெளி​நாட்டு நிறு​வனங்​களின் மென்​பொருட்​களை​தான் பயன்​படுத்தி வரு​கிறோம். இந்​நிலை​யில் உள்​நாட்டு நிறு​வன​மான ஸ்ரீதர் வேம்​பு​வின் சோஹோ நிறு​வனம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’ என்ற ஆன்​லைன் தளத்தை உரு​வாக்​கி​யுள்​ளது. இதில் உள்ள மென்​பொருட்​கள் மூலம் அனைத்து அலு​வலக ஆவண பணி​களை​யும் மேற்​கொள்ள முடி​யும்.

இந்நிலையில், மத்​திய கல்வி துறை அமைச்​சகம் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: சோஹோ​வின் உள்​நாட்டு ஆபிஸ் ஆன்​லைன் மென்​பொருட்​களை பயன்​படுத்​து​வதன் மூலம், சுதேசி இயக்​கத்​தில் நாம் தைரிய​மான நடவடிக்​கையை எடுக்​கிறோம். உள்​நாட்டு புது​மை​யுடன் இந்​தியா முன்​னேற நாம் அதி​காரம் அளிக்​கிறோம். இதன் மூலம் உள்​நாட்டு டிஜிட்​டல் கட்​டமைப்பு வலு​வடைந்​து, நமது தரவு​கள் பாது​காப்​புடைய​தாக​வும், தற்​சார்​புடைய​தாக​வும் இருக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *