
புதுடெல்லி: கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அலுவலக பணிகளுக்கெல்லாம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருட்களைதான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் உள்நாட்டு நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’ என்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் மூலம் அனைத்து அலுவலக ஆவண பணிகளையும் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், மத்திய கல்வி துறை அமைச்சகம் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சோஹோவின் உள்நாட்டு ஆபிஸ் ஆன்லைன் மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், சுதேசி இயக்கத்தில் நாம் தைரியமான நடவடிக்கையை எடுக்கிறோம். உள்நாட்டு புதுமையுடன் இந்தியா முன்னேற நாம் அதிகாரம் அளிக்கிறோம். இதன் மூலம் உள்நாட்டு டிஜிட்டல் கட்டமைப்பு வலுவடைந்து, நமது தரவுகள் பாதுகாப்புடையதாகவும், தற்சார்புடையதாகவும் இருக்கும்.