
பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
நேற்றைய தினம் கெமி, கம்ருதீன், திவாகர், பிரவீன் தேவசகாயம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (அக்.7) வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் திவாகருக்கும், ரம்யா ஜோவுக்கும் சண்டை நடக்கிறது.
‘கெமி இவர் விஷயத்தில் எதுவும் சொல்லக்கூடாது, பிரவீன் அண்ணாவும் எதுவும் சொல்லக்கூடாது.
ஆனால் இவர் மட்டும் எல்லா விஷயத்திலும் மூக்கைவிட்டு, இது தப்புனு சொல்வாரு என ரம்யா ஜோ பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த திவாகர், ‘ஏய் சொல்றதை கேளுமா’ என கத்துகிறார்.
இதனால் கோபப்பட்ட ரம்யா ஜோ, ‘கத்துற வேலையெல்லாம் இங்க வச்சுக்கக் கூடாது’ என எகிறுகிறார்.

இதற்கு திவாகர், ‘ஏய் மரியாதையா பேசுமா படிச்சிருக்கியா, படிக்கலையா நீ…நாகரீகம் தெரியுமா உனக்கு’ என கேட்க படிப்பை பற்றி பேசியதால் சக போட்டியாளர்களும் ரம்யா ஜோவுக்கு சப்போர்ட் செய்து ‘படிப்பு பத்தி கேக்குறீங்கள்ல நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா’ என கம்ருதீன், FJ ஆகியோர் திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.