
சென்னை: தமிழகத்தில் உயர்கல்விப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வருவதால் உயர்கல்வி வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் கல்வி, நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.