• October 6, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன் 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் நீந்​திக் கடந்​தார். சென்னை முகப்​பேர் மேற்கு பகு​தி​யைச் சேர்ந்த பெரி​யார் செல்​வன், பத்​மப்​பிரியா தம்​ப​தி​யின் மகன் புவிஆற்​றல் (12). முகப்​பேரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படிக்​கிறார். இவர் முழங்​காலுக்கு கீழே பாதிக்​கப்​பட்ட மாற்​றுத் திற​னாளி​யா​வார்.

2022-ல் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தலுடன், மாணவர் புவி ஆற்​றல் நீச்​சல் பயற்​சி​யைத் தொடங்​கி​னார். 2024-ல் கோவா​வில் நடை​பெற்ற தேசிய அளவி​லான நீச்​சல் போட்​டிகளில் தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்​கம் வென்​றுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *