
விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள கோவில்வீரார்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களது மகன் அரவிந்த் (7), அப்பகுதியில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்புப் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அய்யனார், தேவிகா, அரவிந்த் மற்றும் தேவிகாவின் அண்ணன் மகன் ஆனந்தகுமார் ஆகியோர் பைக்கில் மலைப்பட்டி பெருமாள் கோயிலுக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். அய்யனார் பைக்கை ஓட்டினார்.