
மதுரை: “மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுதானே ஆளுங்கட்சியின் ஊழல்களை சொல்ல முடியும்” என்று நடைபயண அனுமதி மறுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் சம்பவத்தால் நடைபயணத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், அதே புதூர் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ”மதுரை, நெல்லை, கன்னியா குமரியில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் உள்ளன. இதற்காக வந்தேன். எனது நடைபயணத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால், பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.