
திருச்சி: பாஜகவின் அரசியல் உள்நோக்கத்துக்கு தவெக தலைவர் விஜய் பலியாகிவிடக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அக்.11-ம் தேதி தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க உள்ளோம். கரூர் சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை அரசியல் ஆதாயம் கருதி திசை திருப்ப முயற்சிக்கின்றன. தமிழக அரசியலுக்கு இது உகந்ததல்ல. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டுள்ளார்.