
சென்னை: திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசும்போது, “பொதுவுடைமை இயக்கத்தினர் ஒரு காலத்தில் பெரியாரை எதிர்த்தனர். ஆனால், இந்த மேடையில் பெரியார்தான் தேவை என்று அக்கட்சியினர் சொல்கின்றனர்” என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசும்போது, “நாங்கள் கருத்தால் முரண்பட்டது உண்மை. ஆனால் பெரியாருக்கு தீங்கு செய்யவில்லை. துரோகம் செய்யவில்லை. நாங்கள் இங்கு வந்து மேடையில் அமர்ந்திருக்கிறோம் என்றால் பெரியார் எங்களுக்கு தேவைப்படுகிறார், நிரப்பிக் கொள்கிறோம்.