
சென்னை: திமுகவின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ எனும் பிரச்சார வாசகத்தை விமர்சித்து எந்த சண்டையும் இல்லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் 2 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திருவருட்பா-ஆறாம் திருமுறை’ எனும் நூலின் இந்திப்பதிப்பை வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வள்ளலார் சன்மார்க்க கண்காட்சியையும் பார்வையிட்டார்.