
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.