
மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.
ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து விஷாலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் விஷால்.