
‘விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பாவமல்ல, சாபம்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கண்டனம் தெரிவி்த்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதனால், கூட்டணி மாற்றம் தொடர்பான பேச்சு எழுந்தது. இதுதொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் அது ஒன்றும் பாவம் இல்லையே?’’ என்று கூறியிருந்தார்.